ஈரோடு ஜூன் 9-
நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில விவசாயிகள் அணியின் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி லோகநாதன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது
இந்தியாவிலேயே கட்சி தொடங்கிய நாளிலிருந்து கூட்டணி பலம் இன்றி, ஊடக பலமின்றி, பணபலம் இன்றி பெண்களுக்கு 50 சதவீதம் என்ற அடிப்படையில்,
ஆணும் பெண்ணும் சமம் என்று கொள்கையுடன் தனித்துப் போட்டியிட்டு 8.19 சதவீதம் வாக்குகள் பெற்று மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்று வெற்றி அடைந்துள்ளோம்.
அந்த வகையில் ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் மருத்துவர் கார்மேகன் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு ஒலிவாங்கி சின்னம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது .
கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் மிக குறைவான நாட்களில், புதிய சின்னத்தை வாக்காளர்களில் முடிந்த அளவு கொண்டு சேர்த்தோம். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஈரோடு வேட்பாளர் 82 ஆயிரத்து 796 வாக்குகள் பெற்று, போட்டியிட்ட வேட்பாளர்களில் மூன்றாம் இடத்தைப் பெற்று இருக்கிறார்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பினை வழங்கிய தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் வேட்பாளர்களுக்கும், விலைமதிப்பற்ற உழைப்பை கொட்டி கொடுத்த கட்சி பொறுப்பாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் வாக்காளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.