சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலராங்கியம் பஞ்சாயத்து உட்கடை கிராமம் கூடத்துப்பட்டி-
யில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில்
ஊராட்சி செயலர்
ம.தண்டிலிங்கம்
தண்ணீர் இன்றியமையாமை குறித்தும் அதனைத் தொடர்ந்து ஊராட்சியில்
2024–25 ஆண்டிற்கான பொது நிதி செலவினங்கள்
மற்றும்
கலைஞர் கனவு இல்லத் திட்டம் உள்ளிட்ட 21 முக்கிய
தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது, இந்த கூட்டத்திற்கு கிராம பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.