மதுரை ஆகஸ்ட் 8,
மதுரை மாவட்டம் கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் மரு. செல்வ விநாயகம் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ. வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பா. குமரகுருபரன், மேலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.