மானாமதுரை:செப்:17
மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் காலனி இந்திரா நகர் பகுதி மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய இளம் வயது கவுன்சிலருக்கு பாராட்டு.
மானாமதுரை நகர்மன்ற 21 வார்டு பகுதி கவுன்சிலராக இருப்பவர் செல்வக்குமார்
தனது வார்டு பகுதி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில்
நீண்ட நெடுங்காலமாக சாலைகளே இல்லாத கிருஷ்ணராஜபுரம் காலனி இந்திரா நகர்ப்பகுதி மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை கேட்டறிந்த கவுன்சிலர் செல்வக்குமார் அவர்களின் முக்கிய கோரிக்கையான சாலை வசதி கோரிக்கையை தனது தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி இரவிக்குமார் அவர்களிடம் கோரிக்கை வைத்து உரிய திட்ட மதிப்பீட்டுத் தொகையை பெற்று பேவர் பிளாக் சாலைகளை அமைத்து தந்துள்ளார்.
கவுன்சிலர் செல்வக்குமார் அவர்களின் மக்கள் சேவைகளை அப்பகுதி கிராம பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.