மதுரை மாநகரிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்
களுக்கிடையே அவ்வப்
போது
மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன,
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியார் பேருந்து நிலையத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்
கொண்ட வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மதுரை மாநகர் வைகை ஆற்றுப் பகுதியில் உள்ள கல் பாலத்தில் நேற்றிரவு
பள்ளி மாணவர் ஒருவரை 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சரமாரியாக தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோவில் செல்லூர் பகுதியில் இருந்த மாணவரை அழைத்து வந்து ஆற்றுப் பகுதியில் வைத்து சரமரியாக தாக்கியது முதல் கட்ட விசாரணையில் தெரிய
வந்துள்ளது.
மேலும்
இந்த வீடியோ காட்சியை அடிப்
படையாகக் கொண்டு செல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்
கப்பட்டுள்ளது.
இது போன்று தொடர்ந்து, போன்ற சம்பவங்கள்
பள்ளி மாண
வர்களுக்கிடையே,
அதிகரித்து உள்ளது.இதனால் சக மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை
ஏற்படுத்தியுள்ளது.