ஈரோடு ஏப் 16
டாக்டர் அம்பேத்கர் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதை தொடர்ந்து ஈரோட்டில் நடந்த விழாவில் அமைச்சர் முத்துசாமி
2,263 பயனாளிகளுக்கு ரூ.13.96 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது
ஈரோடு மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் தையல் இயந்திரம், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு, பழங்குடியினர் நலவாரிய அட்டை, பழங்குடியினர் வீட்டு திட்டம், தாட்கோ சார்பில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் சமூக பொருளாதார தொழில் முனைவு திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி, திருமணம் மற்றும் கல்வி உதவித் தொகை, வருவாய் மற்றும் பேரிடர்
மேலாண்மைத்துறையின் சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, சான்றிதழ்கள், மகளிர்திட்டம் சார்பில் வங்கி இணைப்புக்டன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்ளுக்கு கடனுதவி, பயிர்கடன், மாற்றுத்திறனாளி கடன், சிறுவணிகக்கடன், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி, தொழிலாளர் நலத்துறையின் சார்பில் கல்வி, திருமணம், இயற்கை மரண உதவித்தொகை, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலவாரிய பதிவு அட்டைகள், ஓய்வுதியம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் இணை மானிய திட்டம், மாற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீட்டு கட்டுவதற்கான ஆணைகள், ஈரோடு மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் என 2,263
பயனாளிகளுக்கு ரூ. 13 கோடியே 96 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா எம் பி க்கள் அந்தியூர் செல்வராஜ் கே ஈ பிரகாஷ் வி சி சந்திரகுமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.