ஈரோடு டிச 30
ஜவுளி தொழிலில் பெண்கள் மற்றும் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் குடிமை சமூகங்களின் பங்கு பற்றிய கருத்தரங்கம் ஈரோடு ஐஸ்வர்யா ஹோட்டலில் நடந்தது சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையத்தின் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் செயல் இயக்குனர் நம்பி மற்றும் ஜீவன் அறக்கட்டளையின் தலைவர் முனைவர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினர் .
ஜவுளி தொழில் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் ஜவுளி தொழிலில் தொழிலாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் சவால்கள் மற்றும் உரிமை மீறல்கள் குறித்து வள ஆதார குழு உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் ஜீவன் அறக்கட்டளையின் தலைவர் முனைவர் செல்வகுமார் கலந்து கொண்டு புதிய தொழிலாளர் குறியீடு கள் தொகுப்புகள் பற்றி பேசினார்.
அப்போது அவர் தொழிற்சங்க சட்டங்கள் தொழிலாளர்களின் உரிமைகள் தொழிற்சங்கம் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வரம்பு தேசிய பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆலோசனை சமூக வாரியம் பாதுகாப்பு குறியீடு பற்றிய முக்கிய அம்சங்கள் இழப்பீடு மற்றும் அபராதம் போன்றவை குறித்தும் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்தும் விளக்கி பேசினார் கூட்டத்தில் பெண் தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதில் குடிமை சமூக அமைப்புகளின் பங்கு உத்திகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கருத்தரங்கில் கலந்து கொண்ட குடிமை சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பேசினர்.
கூட்டத்தில் கேர் தொண்டு நிறுவன இயக்குனர் சார்லஸ் பிரபு எல்.பி.எப். தொழிற்சங்க தலைவர் கோபால் சிஐடியு சுப்ரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஒருங்கிணைப்பாளர் கருணாம்பிகை நன்றி கூறினார்.