அரியலூர், ஆக:11
“போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” எனும் இலக்கை அடையும் வகையில், போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திடுவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” எனும் இலக்கை அடையும் வகையில், போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திடுவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் இலக்கை அடையும் விதமாக போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு கூட்டங்கள், உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி ஆகியன கடந்த ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்றதைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டும் 12.08.2024 அன்று மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள் (11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்கள்) மற்றும் கல்லூரிகளில் மாணாக்கர்கள், இளைஞர்கள், பெண்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, அரியலூர் மாவட்டத்தில், 12.08.2024ஆம் நாளன்று, போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் இலக்கை அடையும் வகையில், போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திடுவது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் (11, 12 ஆம் வகுப்பு மாணாக்கர்கள்) அனைத்து கல்லூரி மாணாக்கர்கள் அனைவரையும், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 12.08.2024 அன்று உறுதிமொழி ஏற்கும் போது. அதனை காணொளிக் காட்சி வழியாக காட்சிபடுத்தி உறுதிமொழி ஏற்கச் செய்தல் தொடர்பாகவும், மேலும், போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாகவும், 11 12-ஆம் வகுப்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளை கொண்டு விழிப்புணர்வு பேரணி நடத்துவது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.
பொதுமக்கள் கூடும் இடங்களில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 12.08.2024 அன்று உறுதிமொழி ஏற்கும் போது, அதனை காணொளிக் காட்சி வழியாக காட்சிபடுத்தி உறுதி மொழி ஏற்கச் செய்தல் மற்றும் மேற்படி நிகழ்ச்சிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள காவல் மற்றும் கலால் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அனைத்து மாவட்ட நிலை அலுவலர்களையும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்கச் செய்யவும், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களை கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும,; அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி தலைவர்களை கொண்டு ஒவ்வொரு ஊராட்சியிலும் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்கள் இடையேயும் மற்றும் மாணவர்களுக்கு இடையேயும் ஏற்படுத்துதல் வேண்டும் எனவும், அரியலூர் மாவட்டத்தில் 12.08.2024 அன்று பள்ளி, கல்லூரிகளில் நடைபெற உள்ள போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி எடுப்பு நிகழ்ச்சியில், E-Pledge உறுதிமொழி எடுப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் https://enforcementbureautn.org/pledge என்ற இணைதளத்தின் வழியாக உறுதிமொழி ஏற்று அதற்கான மின் சான்றிதழினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், எனவே மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், அனைவரும் போதைப்பொருள் உறுதிமொழியினை ஏற்று அரியலூர் மாவட்டத்தினை போதைப்பொருட்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற உறுதியேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) விஜயராகவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம் மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.