பரமக்குடி,மார்ச்.24 : பரமக்குடி காந்தி சிலை முன்பு திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் திமுக மாவட்ட இளைஞரணி சார்பில் மத்திய அரசின் இந்தி திணிப்பு, நிதிப் பகிர்வில் பாரபட்சம்,தொகுதி மறுசீரமைபு ஆகியவற்றை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்,நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி,முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜன், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் இன்பா ரகு, வடக்கு நகர் செயலாளர் ஜீவரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் ராஜா வரவேற்றார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் எம். எல்.ஏ, பேசுகையில் பாஜக தமிழகத்திற்கும் தமிழுக்கும் துரோகி என்றால் அதிமுக பச்சை துரோகியாக செயல்பட்டு வருகின்றனர்.தமிழுக்கும் தமிழகத்திற்கும் எதிராக செயல்படும் பாஜக அரசை கண்டித்து எப்போதாவது அதிமுக ஆர்ப்பாட்டம் செய்ததுண்டா அவர்களுக்குள் கள்ள உறவு உள்ளது. இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்டோருக்கும் மகளிர்களுக்கும் இட ஒதுக்கீடு பெற்று தந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்.அதைப்போலவே, தற்பொழுது படாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பில் தமிழகம் முன்னிலை மற்ற மாநிலங்கள் ஒருங்கிணைத்து வருவது கட்டாயம் வெற்றிக்கு வழிவகுக்கும். புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் உடனே முதல்வராக வர முடியாது 15 ஆண்டுகள் சமுதாயத்துக்கு உழைத்து விட்டு முதல்வராக வரவேண்டும்.நடிகர்களை பார்ப்பதற்காக கூட்டம் வருமே தவிர அது ஒட்டாக மாறாது.என பேசினார். இதனைத் தொடர்ந்து இளம் பேச்சாளர் நிலோபர் நிஷா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் கருப்பையா, தீர்மானக் குழு துணைத் தலைவர் திவாகரன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார்,சக்தி, கிருஷ்ணமூர்த்தி,வாசுதேவன், அண்ணாமலை,கதிரவன் குணசேகரன்,ஜாகிர் உசேன், பொதுக்குழு உறுப்பினர்கள் அருளானந்து,பூமிநாதன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குமரகுரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சண். சம்பத்குமார் நன்றி கூறினார். மேலும் இளைஞர் அணி அமைப்பாளர்கள் ரமேஷ் கண்ணா,சத்தியேந்திரன், கோபிநாத்,தௌபிக் ரகுமான் கலந்து கொண்டனர்.
பட விளக்கம்.
பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பரமக்குடியில் திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் .
பரமக்குடி,மார்ச்.25 : பரமக்குடி காந்தி சிலை முன்பு திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் திமுக மாவட்ட இளைஞரணி சார்பில் மத்திய அரசின் இந்தி திணிப்பு, நிதிப் பகிர்வில் பாரபட்சம்,தொகுதி மறுசீரமைபு ஆகியவற்றை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்,நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி,முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜன், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் இன்பா ரகு, வடக்கு நகர் செயலாளர் ஜீவரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் ராஜா வரவேற்றார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் எம். எல்.ஏ, பேசுகையில் பாஜக தமிழகத்திற்கும் தமிழுக்கும் துரோகி என்றால் அதிமுக பச்சை துரோகியாக செயல்பட்டு வருகின்றனர்.தமிழுக்கும் தமிழகத்திற்கும் எதிராக செயல்படும் பாஜக அரசை கண்டித்து எப்போதாவது அதிமுக ஆர்ப்பாட்டம் செய்ததுண்டா அவர்களுக்குள் கள்ள உறவு உள்ளது. இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்டோருக்கும் மகளிர்களுக்கும் இட ஒதுக்கீடு பெற்று தந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்.அதைப்போலவே, தற்பொழுது படாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பில் தமிழகம் முன்னிலை மற்ற மாநிலங்கள் ஒருங்கிணைத்து வருவது கட்டாயம் வெற்றிக்கு வழிவகுக்கும். புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் உடனே முதல்வராக வர முடியாது 15 ஆண்டுகள் சமுதாயத்துக்கு உழைத்து விட்டு முதல்வராக வரவேண்டும்.நடிகர்களை பார்ப்பதற்காக கூட்டம் வருமே தவிர அது ஒட்டாக மாறாது.என பேசினார். இதனைத் தொடர்ந்து இளம் பேச்சாளர் நிலோபர் நிஷா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் கருப்பையா, தீர்மானக் குழு துணைத் தலைவர் திவாகரன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார்,சக்தி, கிருஷ்ணமூர்த்தி,வாசுதேவன், அண்ணாமலை,கதிரவன் குணசேகரன்,ஜாகிர் உசேன், பொதுக்குழு உறுப்பினர்கள் அருளானந்து,பூமிநாதன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குமரகுரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சண். சம்பத்குமார் நன்றி கூறினார். மேலும் இளைஞர் அணி அமைப்பாளர்கள் ரமேஷ் கண்ணா,சத்தியேந்திரன், கோபிநாத்,தௌபிக் ரகுமான் கலந்து கொண்டனர்.