சங்கரன்கோவிலில்தென்காசி வடக்கு மாவட்ட திமுக வக்கீல் அணி ஆலோசனைக் கூட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து வைத்து நடந்தது. கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தின் நோக்கத்தை வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பிச்சையா பேசினார். கூட்டத்தில் நடைபெற உள்ள வக்கீல் அணி மாநாட்டில் வக்கீல்கள் திரளாக கலந்து கொள்வது, தென்காசி வடக்கு மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் இலவச சட்ட ஆலோசனை முகாம்கள் நடத்துவது, 2026 சட்டமன்ற தேர்தலில் கழக வெற்றிக்காக பாடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வக்கீல் அணி தலைவர் முத்துராமலிங்கம் துணை அமைப்பாளர்கள் அருணாசலம் பிரபாகரன் காந்தி நகர் ஜெயக்குமார் காளிராஜ் தனசேகரன் அரசு வழக்கறிஞர்கள் மருதப்பன் அன்புச்செல்வன் ஜெயக்குமார் பேட்ரிக் பாபு சங்கரன்கோவில் அறங்காவலர் குழு தலைவர் சண்முகையா உட்பட திமுக வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.
திமுக வக்கீல் அணி ஆலோசனை கூட்டம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics