கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட வருவாய்த்துறை ஆட்சியரின் வருவாய் தீர்வாயம் முகாமில் தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவரும் தாழக்குடி கவுன்சிலர் ரோகிணிஅய்யப்பன் முகாமில் கலந்து கொண்டு
1.தாழக்குடி வீர கேரளப்பன் ஏரியின் மேற்கு பக்கம் கடந்த மழையினால் சுற்றுச்சுவர் எல்லாம் பாதிக்கப்பட்டு சுவர் இடியும் நிலையில் உள்ளது எனவே இவ் வழியாக புதப்பாண்டி தாழக்குடி சாலை துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது அதை உடனடியாக சரி செய்யவும்
2.தாழக்குடி முதல் பூதப்பாண்டி ஆண்டித்தோப்பு சாலையின் இரு பக்கமும் முட்புதர்கள் அடைந்து பொதுமக்கள் ரோட்டின் பக்கத்தில் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே முட்புதர்களை அகற்றி பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடவும்
3.பூலாங்குழி முதல் ஆண்டித்தோப்பு வரை உள்ள புத்தனாறு கால்வாயின் பக்கச்சுவர் சேதமடைந்து விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது அதனை சரிபடுத்த கோரியும்.
4.தாழக்குடி மாடத்தெரு; நடுத்தெரு: வால்காரன் தெரு நடுத்தெரு; கீழத்தெரு; ஆகிய தெருக்களில் மின் தட்டுப்பாடு அதிகம் இருப்பதால் புதிய மின்மாற்றி அமைத்திட வேண்டியும்
மாவட்ட வருவாய்துறை அலுவலர் .பாலசுப்பிரமணியம் இடம் மனு அளிக்கப்பட்டது அப்போது தோவாளை வட்டார தாசில்தார் கோலப்பன் தோவாளை வட்டார துயர்துடைப்பு தாசில்தார் தாஸ் துணை வட்டாட்சியர் முருகன்; பூதப்பாண்டி வருவாய் ஆய்வாளர் ராணி நாகேஸ்வரி தாழக்குடி கிராம நிர்வாக அலுவலர் பாத்திமா ஷிஃபா மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்



