மதுரை செப்டம்பர் 8,
மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம் மற்றும் பபாசி ஒருங்கிணைப்பில் மதுரை புத்தக திருவிழா-2024ஐ வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மோனிகா ராணா மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் உடன் உள்ளனர்.