திண்டுக்கல் குமரன் திருநகர் பகுதியில் மகளிர் சுய உதவி குழுகளுக்கு ஒரு கோடிய 60 லட்சம் கடன் வழங்கும் விழா நடைபெற்றது
திண்டுக்கல் குமரன் திருநகர் பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்களின் மகளிர் திட்ட கூட்டமைப்பு கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டு இருபதாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்தக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி நாகராஜன் தலைமையில் 14 குழுகளோடு இயங்கி வருகிறது இதுவரை தனியார் வங்கிகளில் 7-முறை சுய உதவி குழுகளுக்கு எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பாராமல் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி கடன் பெற்றுக் கொடுத்துள்ளார் இதன் தொடர்ச்சியாக தற்போது தேசிய மயமாக்கப்பட்ட யூனியன் வங்கியில் கடன் விண்ணப்பம் செய்ததில் ஒவ்வொரு குழுவிற்கும் தலா 20-லட்சம் வீதம் 6,குழுகளுக்கு ஒரு கோடிய 60 லட்சம் வழங்கியுள்ளனர்அதன்படி திண்டுக்கல் குமரன் திருநகர் பகுதியைச் சேர்ந்த சுய உதவி குழுகளுக்கு ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி நாகராஜன் தலைமையில் பணம் வழங்கப்பட்டது.இதனால் குமரன் திருநகர் பகுதியில் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்துள்ளனர். மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பு அரசு பதிவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது