திண்டுக்கல்
சிறுமலையில் உள்ள காஃபி கவுண்டியில் தமிழ்நாடு வில் விளையாட்டு சங்கம் மற்றும் திண்டுக்கல் பிஎஸ்எப் மல்டி ஆர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் இணைந்து இயற்கை சூழலுக்கு ஏற்ப தீங்கு விளையாத ஆவணமான தேசிய பாதிப்பு இல்லாத வேட்டை வில் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இயற்கையின் அமைதியுடனும் பாரம்பரிய வில் வித்தை கழகமுடனும் இணைந்து இதற்கான விளையாட்டையும், மாயாஜால தருணங்களையும் உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அகில உலகத் தலைவர் மாமதுரையார் மற்றும் தமிழ்நாடு அப்பளம் ,வடகம், மோர்வத்தல் சங்கம் மாநிலதலைவர் முனைவர் திருமுருகன், தமிழ்நாடு வில் விளையாட்டு சங்க பொதுச்செயலாளர்
மணிகண்டன்,
தமிழ்நாடு வில் விளையாட்டு
சங்க போட்டி இயக்குனர் மணிவாசகம், திண்டுக்கல் மாவட்ட வில் விளையாட்டு சங்க செயலாளர் ராஜா,
திண்டுக்கல் கலை சங்கமம் இயக்குனர் வெ.இராஜகோபால்உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளும், விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது