மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முத்திரைப் பதித்த மூன்றாண்டுகளில் முத்தான எட்டு திட்டங்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் 4,84,397 நபர்களும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 294,561 குடும்பத்தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 07.05.2021 அன்று ஆட்சி பொறுப்பேற்றது முதல் நாளது வரை ஏழை, எளியோர். மகளிர், கல்லூரி மாணவ, மாணவிகள், தொழில் முனைவோர்கள், பட்டியலின மக்கள், சிறுபான்மையினர், திருநங்கைகள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் மக்களைத்தேடி மருத்துவம். விடியல் பயணம், புதுமைப்பெண், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முத்திரை பதிக்கும் மூன்று ஆண்டுகளில் தொழில் துறையில், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில், ஏற்றுமதியில் கல்வியில், பொருளாதார வளர்ச்சியில், மருத்துவத்தில், கிராமங்கள் மற்றும் நகரங்களில் உட்புறக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில், வேளாண்மை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முதலிடத்திலும், முன்னணியிலும் தமிழ்நாட்டினை முன்னிறுத்தி, ஏனைய பிற மாநிலங்களை ஏங்க வைத்ததோடு, இந்திய திருநாட்டையும் வியக்க வைத்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
1. மக்களைத்தேடி மருத்துவத் திட்டம்:
முத்திரை பதித்த மூன்றாண்டுகளில் முத்தான எட்டு திட்டங்களில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில் 05.08.2021 அன்று துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர்கள், பெண் சுகாதார தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, முடக்குவாதம், பெண்களுக்கு கருப்பை, வாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிவது, தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளை செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறை சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக் கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஏழை, எளியோரின் இல்லம் தேடிச் சென்று இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கம் இத்திட்டத்தினால் மாநிலம் முழுவதும் 1.70 கோடி நபர்கள் பயனடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ்
4,84,397 நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.எனக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக இரத்த அழுத்தம் நோய் உள்ளது. நான் 15 கிலோ மீட்டர் தொலைவு உள்ள சூளகிரி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தேன். குறிப்பாக எனக்கு தலை சுற்றல் ஏற்பட்டு நடக்க முடியாத சூழ்நிலையில் மிகவும் சிரமபட்டு பேருந்தில் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெறுவேன். தமிழக முதல்வர் அவர்கள் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள சாமனபள்ளிக்கு நேரடியாக வந்து மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செவிலியர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து இரத்த அழுத்தம் பரிசோதனை செய்து எனக்கு இரண்டு மாதத்திற்கு தேவையான மருந்து மாத்திரை வழங்கி வருகிறார்கள். இதனால் எவ்வித சிரமமுன்றி மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறேன். இத்திட்டத்தை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
2 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்:
முத்திரை பதித்த மூன்றாண்டுகளில் முத்தான எட்டு திட்டங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.09.2023 அன்று துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு உரிய விதிமுறைகளைப் பின்பற்றி நாளது வரையில் 1 கோடியே 15 இலட்சம் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், 2,94,561
குடும்பத் தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர்.நான் மத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஜீடிகுப்பம் கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் எங்கள் கிராமத்திலிருந்து நாள்தோறும் கிருஷ்ணகிரிக்கு வந்து பூ வியாபாரம் செய்து வருகிறேன். இதனால் நாள்தோறும் 100 முதல் 150 வரை வருமானம் கிடைத்தது. மழை மற்றும் வெயில் காலங்களில் மற்றும் உடல்நிலை சரியில்லாத நாட்களில் வியாபாரம் செய்ய முடியாது. இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் என்னைப்போன்ற ஏழை பெண்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், ரூ.1000 வழங்கும் திட்டத்தை வழங்கி வருகிறார்கள். எனக்கும் மாதந்தோறும் ரூ.1000 கிடைக்கிறது. இது என் குடும்ப செலவிற்கு பேருதவியாக உள்ளது. இத்திட்டத்தை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.



