தருமபுரியில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48- வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தருமபுரி நகர கழக சார்பில் நகரச் செயலாளர் நாட்டன் மாது தலைமையில் நான்கு ரோட்டில் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், நகர பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பிடமனேரியில் உள்ள ரோட்டரி விவேகானந்தா செவித்திறன் குறையுடையோருக்கான உயர்நிலைப் பள்ளியில் உள்ள மாணவ , மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நகர இளைஞரணி சார்பில் நகரக் கழகச் செயலாளர் நாட்டன் மாது தலைமையில் பெரியார் சிலை அருகில் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், பொது மக்களுக்குஅன்னதானம் , பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டன் மாது, முல்லைவேந்தன், ரஹீம் சிறுபான்மை மாவட்ட அமைப்பாளர், டி. ஏ. ரவி மற்றும் இளைஞர் அணி அமைப்பாளர் ஜே. பி.சபரி பாண்டியன், இளைஞர் அணி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48- வது பிறந்த நாள் விழா

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics