போச்சம்பள்ளி மற்றும் ஊத்தங்கரை பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உரிய உதவிகளை விரைந்து செய்து தர வேண்டுமென தேமுதிக மாநில அவைத் தலைவர் டாக்டர்.இளங்கோவன் வலியுறுத்தல்.
தேமுதிக கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க,கிருஷ்ணகிரி மாவட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசம்பட்டி,போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று மாநில அவை தலைவர் டாக்டர் இளங்கோவன் தலைமையில், கிழக்கு மாவட்ட செயலாளர் சின்னராஜ் முன்னிலையில், நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். மேலும் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டாரங்களில் பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு, நிவாரண பொருட்களை விரைந்து வழங்க வேண்டும் எனவும், பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் இதுவரை வரவில்லை என குற்றம் சாட்டினர். மேலும் தமிழக அரசு உடனடியாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொது மக்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையினை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் தேமுதிக கிழக்கு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி, பழம், உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தேமுதிக கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.சின்னராஜ், மற்றும் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் குமார் மேற்கு மாவட்ட செயலாளர் விஜய சங்கர் மேற்கு மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் முருகேசன், மாவட்டத் துணைச் செயலாளர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் வேலு, காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் விஜய் வல்லரசு, ஒன்றிய பொருளாளர் கணக்கன், பர்கூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் பழனி, திருநாவுக்கரசு, மத்தூர் ஒன்றிய செயலாளர்களான சந்திரசேகர், விவேகானந்தன், அன்பு, ஊத்தங்கரை கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்களான கதிர்வேல், மாதேஷ், பேரூராட்சி செயலாளர் துரை, அரசம்பட்டி வேலூ, சண்முகம், ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், கழக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.