கடையநல்லூர் ஜுலை 3
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகர சபை தலைவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் இது அரசு நடவடிக்கை எடுக்க முன்வராததால் அதிருப்தி கவுன்சிலர்கள் நீதிமன்றத்தில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு முடிவு கட்ட வழக்கு தொடருவதற்காக படை எடுத்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் முழுவதிலும் உள்ள தென்காசி செங்கோட்டை கடையநல்லூர் புளியங்குடி சங்கரன்கோவில் சுரண்டை உள்ளிட்ட ஆறு நகர சபைகளை திமுக மற்றும் திமுக கூட்டணியான காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது இந்த நிலையில் செங்கோட்டை நகர சபை தலைவர் மீது முதல் கட்டமாக திமுக மற்றும் பிற அரசியல் கட்சி கவுன்சிலர்களும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதேபோல் சங்கரன்கோவில் நகர சபையிலும் நகர சபை தலைவர் மீது அனைத்து கவுன்சிலர்களும் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்தனர் இதையடுத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு திமுக மேலிடம் உள்ளபடியே களவிசாரணை மேற்கொண்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் இந்த பிரச்சனையின் சூடு ஆறுவதற்குள் கடையநல்லூரிலும் திமுக நகர சபை தலைவரை குறிவைத்து திமுக மற்றும் திமுக கூட்டணியான முஸ்லிம்லீக் அஇஅதிமுக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் சுயேசசை கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர் இதற்காக கடந்த ஜீன்- 19ஆம் தேதி கடையநல்லூர் நகர சபையில் மிகுந்த போலீஸ் பாதுகாப்புடன் நகர சபை கூட்டம் நகர சபை தலைவர்ஹபிபூர் ரகுமான் (திமுக) தலைமையில் நடந்தது இந்த கூட்டத்திற்கு பெரும்பாலான கவுன்சிலர்கள் வராத நிலையில் ஒன்னாவது வார்டு கவுன்சிலர் ரேவதி (பாஜக) சங்கரநாராயணன் (பாஜக)மற்றும் திமுக கவுன்சிலர்கள் எஸ் ஏ முகமது அலி பாலசுப்ரமணியன் என்ற கண்ணன் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் நகர சபை கூட்டம் நடத்த போதுமான கோரமில்லாத நிலையில் நகர சபை தலைவர் கூட்டத்தை ஒத்தி வைத்தார் இந்த நிலையில் ஏனைய 29 வார்டு கவுன்சிலர்களும் ஒட்டுமொத்தமாக நம்பிக்கை இல்லா தீர்மான விண்ணப்ப படிவத்தை கையொப்பமிட்டு கடையநல்லூர் நகர சபை தேர்தல் நடத்தும் அதிகாரியும் ஆணையாளருமான சுதந்திர இடம் சமர்ப்பித்தனர் ஆனால் மனு கொடுத்து நாட்கள் கடந்ததே தவிர புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான முன்னோட்ட நடவடிக்கையை எதுவும் தேர்தல் நடத்தும் அதிகாரி எடுக்கவில்லை இந்நிலையில் நேற்று(02–7-2024) நகர சபை மூலம் தேர்தல் நடத்தும் அதிகாரி அதிருப்தி கவுன்சிலர்களுக்கு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார் அதில் நம்பிக்கை இல்லா தீர்மான படிவங்களில் ஒரு சிலர் மட்டுமே கையொப்பமிட்டுள்ளனர் மற்ற கவுன்சிலர்களின் கையொப்பங்கள் யாவும் வேறு திட்டங்கள் குறித்த தகவல்களை எழுதி காண்பித்து வெறும் வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கியதாகவும் அதை இந்த விண்ணப்ப படிவத்தோடு இணைத்து ஒரு தவறான தகவலை தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தந்துள்ளதாகவும் கருதி அதிருப்தி கவுன்சிலர்கள் கொண்டு வந்த இந்த நம்பிக்கை இல்லா தீர்மான விண்ணப்ப படிவம் ஏற்றுக்கொள்ள இயலாது என நிராகரித்ததாக அனைவருக்கும் எழுத்துப்பூர்வமான தகவலை தந்தது இதையடுத்து ஆவேசம் அடைந்த அதிருப்தி கவுன்சிலர்கள் பலர் இது குறித்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடையநல்லூர் நகர சபை தலைவர் மீது கொடுக்கப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து முடிவெடுக்க உத்தரவிடவும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கவும் வழக்கு தொடர முனைந்து வருகின்றனர். இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் தன் மீது வந்துள்ளது குறித்து நகர சபை தலைவர் ஹபிபூர் ரஹ்மான் உள்ளபடியே திமுக தலைமையை குறிப்பாக அமைப்புச் செயலாளர்கள் ஆர் எஸ் பாரதி ஆ. ராசா பொருளாளர் துரைமுருகன் தமிழக அரசின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஆகியோரை நேரில் சந்தித்து தான் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை அதன் பின்னால் நடந்த விவகாரங்கள் குறித்து எழுத்து பூர்வமாய் விளக்கம் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது எது எப்படியோ ஜனநாயக மாண்பை காக்கும் பொருட்டு தற்போதைய தமிழக அரசு கடையநல்லூர் நகர சபை தலைவர் மீது கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நடவடிக்கை எடுக்குமா ? புதிய தலைவரை தேர்ந்தெடுக்க துரிதகதியில் நடவடிக்கை எடுக்குமா ? அல்லது வழக்கம் போல் காலதாமதம் செய்து வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் நேரத்தின் போது தேர்தலை நடத்த முடிவு செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…