மதுரை ஜூலை 28
மதுரை
ரயில் நிலையம் கிழக்கு நுழைவு வாயில் அருகே
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே.அப்துல் கலாம் நினைவை போற்றும் வகையில்
மதுரை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறை மற்றும் முதலுதவி சமூக நல அறக்கட்டளையும் இணைந்து வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக தல்லாகுளம் போக்குவரத்து உதவி ஆணையர் இளமாறன். பங்கேற்றார். உடன் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ.தங்கமணி மற்றும் சார்பு ஆய்வாளர்கள் சந்தனகுமார் லிங்ஸ்டன் நந்தகோபால்
உட்பட போக்குவரத்து காவலர்கள் வருகை புரிந்தனர்.
பங்கேற்ற அனைவருக்கும்
அறக்கட்டளை பொதுச் செயலாளர் அர்சத்முபின்
பொன்னாடை போர்த்தி வரவேற்பு செய்தார்.
அதனைத் தொடர்ந்து டாக்டர் ஏபிஜே. அப்துல் கலாம் திருவுருவப் படத்திற்கு போக்குவரத்து உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் முதலுதவி சமூக நல அறக்கட்டளை பொதுச் செயலாளர் ஆகியோரால் மெலுகுவர்த்தி
ஏற்றி
மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சாலைப்
போக்குவரத்து விதிகளை பின்பற்றி வரக்கூடிய வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் மரக்கன்றுகள் மற்றும் சாலை பாதுகாப்பு துண்டு பிரச்சுரங்கள் வழங்கினர்.
இந்த நிகழ்வின் போது மாநகர போக்குவரத்து காவலர்கள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.