புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி
வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
சங்கரன்கோவில் சுரண்டை சாலை சந்திப்பில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு பயணியர் நிழல் கொடை நிழற்குடை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அப்பாஸ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால், விக்னேஷ், சங்கர் ,ராஜ் ,ஜான்சன், பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.