நாகர்கோவில் அக் 15
மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கனிம சுரங்க எதிர்ப்புக் கூட்டமைப்பின் துணை அமைப்பாளர் மற்றும் அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவருமான முத்துக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.
மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கனிம சுரங்க எதிர்ப்புக் கூட்டமைப்பு கெளரவ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பூஜிதகுரு பால. பிரஜாபதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு சாமிதோப்பில் நடைபெற்றது.
நிகழ்வில் கூட்டமைப்பு துணை அமைப்பாளர் மற்றும் அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் கலந்துகொண்டு பூஜிதகுரு பால. பிரஜாபதிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கனிம சுரங்க எதிர்ப்பு திட்டத்திற்கு எதிரான தனது நிலைபாட்டையும் எடுத்துரைத்தார்.
அதுபோன்று கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகளான வழக்கறிஞர் கிறைஸ்ட் மில்லர் (சசிகலா அணி), அல்காலித் (விசிக), கிறிஸ்டி ரமணி (காங்கிரஸ்), பொன்னுலிங்க ஐயன் (ஐக்கிய கம்யூனிஸ்ட்), வழக்கறிஞர் எட்கர் (மக்கள் கண்காணிப்பகம்) போன்ற இன்னும் பலர் கலந்துகொண்டு பால.பிரஜாபதிக்கு பொன்னாடை போர்த்தி கனிம சுரங்க திட்டத்திற்கு எதிரான தங்கள் நிலைபாட்டை எடுத்துரைத்தார்கள். கூட்டமைப்பின் அமைப்பாளர் அன்டன் கோமஸ் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது கருத்தை தெரிவித்திருந்தார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.



