தென்தாமரைகுளம், ஜன. 02- அகஸ்தீஸ்வரம் அருகே சூறைக்காற்றில் தென்னைமரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பம் முறிந்து மின்சாரம் தூண்டிக்கப்பட்டது. அகஸ்தீஸ்வரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை சுமார் 9 மணியளவில் அகஸ்தீஸ்வரத்திலிருந்து தென்தாமரை குளம் செல்லும் சாலையில் மரம் முறிந்து உயர் மின்னழுத்த கம்பியில் விழுந்ததில் மின்கம்பமும் முறிந்தது விழுந்தது.. இதில் மின்கம்பி துண்டாகி தொங்கியது. அந்த நேரம் சாலையில் வாகனங்களோ, பொதுமக்களோ யாரும் செல்லாததால் நல்வாய்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது இந்த சாலை வழியாக சுற்றுவட்டார பகுதிகளான புன்னையடி தேங்காய் காரன் குடியிருப்பு, பூவியூர் தென் தாமரை குளம் ஈச்சன் விளை, வெள்ளையன் தோப்பு, சந்தையடி, இடையன்விளை, மேலச்சந்தையடி போன்ற பகுதிகளில் பொதுமக்கள் செல்லுகின்றனர் இதனால் அந்த வழியில் போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இது குறித்து கொட்டாரம் மின்சார அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இளநிலை பொறியாளர் தலைமையில் பணியாளர்கள் விரைந்து வந்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புது மின்கம்பம் நடப்பட்டு மாலை 6.15 மணியளவில் சரி செய்யப்பட்டு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.
அகஸ்தீஸ்வரம் அருகே சூறைக்காற்றில் தென்னை மரம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics