திண்டுக்கல், மே 25
கலை பண்பாட்டுத்துறை மதுரை மண்டலக்கலை பண்பாட்டு மையம் சார்பாக 2025 ஆம் ஆண்டின் ஜவகர் சிறுவர் மன்றம் கோடைகால கலை பயிற்சி முகாம் ஆனது திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு ரோடு, அரசுமேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 01.05.2025 முதல் 24.06.2025 வரை 20 நாட்களாக கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. திட்ட இயக்குனர் ரமணி தலைமை வகித்து அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கினார். ஓவியம், சிலம்பம், ஜிம்னாஸ்டிக், மல்லர் கம்பம், நாட்டுப்புற நடனம் போன்ற கலைகள் வருடம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன. சிறப்பாக கோடைகால பயிற்சியில் எந்தவித கட்டணமும் இன்றி 264 மாணவர்கள் பயிற்சி பெற்று சான்றிதழை பெற்றுக் கொண்டனர். சிலம்பம் பயிற்சியாளர் மோகன், ஓவிய ஆசிரியர் காளீஸ்வரி, ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் நாகராஜன் மற்றும் நடன ஆசிரியர் விஜயராஜ் ஆகியோர் மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்தனர்.