திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரத்த சோகை பற்றிய மருத்துவ விழிப்புணர்வு பரிசோதனை மற்றும் மருத்துவமனை பரிந்துரைகள் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ஆராதனா தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில்
ஆர்.பி.எஸ்.கே. மருத்துவர்கள் பொ.காவியா,
கா.சதீஷ்குமார் செவிலியர்கள் சசிகலா மற்றும் உமாதேவி, மருந்தாளுநர் தங்க முருகவேலு மற்றும் தினேஷ்குமரன் ஆகியோர்கள் ரத்த சோகை பற்றிய மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்து ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தில் சத்துள்ள உணவுப் பொருட்களை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.