நித்திரவிளை , மே. 29-
நித்திரவிளை அருகே எஸ்டி மாங்காடு பகுதியை சேர்ந்தவர் டேவிட் ராஜ் ( 64). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அண்ணன் தம்பிகளான செல்வராஜ் (57) கனகராஜ் (55) ஆகியோருக்கிடையே சொத்து சம்பந்தமான பிரச்சனை இருந்து வந்தது.
நேற்று மாலை டேவிட் ராஜ் தனது வீட்டில் இருக்கும்போது அங்கு வந்த செல்வராஜ் மற்றும் கனகராஜ் தகாத வார்த்தைகள் பேசி, டேவிட் ராஜன் வீட்டின் முன்பு என்ற வாழை மரத்தை ஒடித்து சேதப்படுத்திவிட்டு வெட்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இது குறித்து டேவிட் ராஜ் நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் அண்ணன் தம்பிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.