அரியலூர், அக்;13
அரியலூர் மாவட்டம்,
செந்துறை வட்டம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளியில்
தொழிற்கல்வி பாடப்பிரிவில் உள்ள மாணவர்களின் ஏற்பாட்டில் தொழிற்கல்வி ஆசிரியர் செங்குட்டுவன் தலைமையில் பள்ளியில் 2024 ஆண்டு நடைபெற்ற ஆயுத பூஜை நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் முன்னிலையில் உதவி தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரிய பெருமக்கள், எஸ் எம் சி ஆசிரிய பெருமக்கள், பயிற்சி ஆசிரியர்கள் கலந்துகொண்டு தொழிற்கல்வி மாணவர்களை வாழ்த்தி பேசினர் மாணவர்கள் கல்வி கற்று அறிவை வளர்த்து தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல உயர்வை அடையவேண்டும் என ஆசிரியர்கள் மாணவர்களை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் பெற்றோர் ஆசிரியர் தலைவர் பெருமாள் தீபாராதனை காண்பித்து அனைத்து இருபால் ஆசிரிய பெருமக்களையும் மாணவச் செல்வங்களையும் வாழ்த்தி மாணவர்களுக்கு அருளாசி வழங்கினார். மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற ஆயுத பூஜை நிகழ்ச்சியில் பொதுமக்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.