நாகர்கோவில் அக் 30
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்படி, பள்ளிக்கூட மாணவ, மாணவியர்களுக்கு, காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் சாலை போக்குவரத்து விதிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓபன் ஹவுஸ் எனப்படும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவில் ஆயுதப்படையில் வைத்து நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் லிட்டில் பிளவர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கார்மல் மேல்நிலைப்பள்ளி மற்றும் குட் ஷேபர்ட் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தை சுற்றி பார்த்தனர். ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான போக்குவரத்து பூங்கா சுற்றி காண்பிக்கப்பட்டு, சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் மாவட்ட ஆயுதப்படை போலீசார் பயன்படுத்தும் ஆயுத வகைகள் பற்றி மாணவ மாணவிகளுக்கு செயல்முறை விளக்கத்துடன் காண்பிக்கப்பட்டது. காவல்துறையினரின் கவாத்து தொடர்பான செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. பின்பு பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் பயன்படுத்தப்படும் லைப் ஜாக்கெட் , லைப் போட்டு , லைப்பூய் ரிங் ஆகியவையும் காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜோசப், காவல் ஆய்வாளர் சுஜாதா மற்றும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உதவி ஆய்வாளர் சுமித் ஆல்ட்ரின் கலந்து கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.