ராமநாதபுரம், பிப்.28-
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கிழக்கு மாவட்டம் சார்பில் 216 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு, வக்பு திருத்த மசோதா எதிர்ப்பு மற்றும் போதை ஒழிப்பு பொதுக்கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பனைக்குளம் தமுமுக மமக கிளை சார்பில் நடைபெற்ற 216 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு வக்பு திருத்த மசோதா எதிர்ப்பு போதை ஒழிப்பு பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் அகமது ஹசன் தலைமை வகித்தார். சமூக நீதி மாணவரணி மண்டல செயலாளர் முகமது பஹாத் வரவேற்புரை ஆற்றினார். தமுமுக மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி தமுமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஜாவித் அஸ்ஸாம், , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜாகிர் உசேன், மாநில மருத்துவ அணி பொருளாளர் அப்துல் ரபீக், மண்டல மருத்துவ அணி செயலாளர் சுலைமான், பனைக்குளம் முஸ்லிம் பரிபாலான சபை அப்துல் வஹாப், பனைக்குளம் முஸ்லிம் நிர்வாக சபை ஹம்சத் அலி, பனைக்குளம் சையது அஸ்காரி தமுமுக மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் யாண்பு இப்ராஹிம் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் கவுன்சிலர் பெரியசாமி தொண்டிராஜ் ராவுத்தர் , சமூக நீதி மாணவர் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் யாசிர் ஹசிப் ரஹ்மான் ஊடக அணி மாவட்ட செயலாளர் பகுருல்லா சுல்தான் விவசாய அணி மாவட்ட செயலாளர் வைத்துள்ளார் மீனவர் அணி மாவட்ட செயலாளர் புகாரி மகளிர் பேரவை மாவட்ட செயலாளர் செரிபா ஜைனுலாப்தின் கவுன்சிலர் சமீமா பானு காதர் சாகிப் சமிர் ஹுசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் தமிழ்நாடு பக் வாரிய உறுப்பினர் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது, ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் நவாஸ் கனி, தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா, தலைமைக் கழக பேச்சாளர் கோவை செய்யது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, ஒவ்வொருவரும், கூட்டத்தின் நோக்கம் குறித்தும் தமுமுகவின் ஆம்புலன்ஸ் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த சேவைகள் குறித்தும், தமுமுகவின் முதல் ஆம்புலன்ஸ் சேவை தொண்டியில் துவங்கப்பட்ட பழைய நினைவுகள் குறித்தும், தமுமுகவின் முதல் 16 ஆண்டு மக்கள் சேவை ஜாதி மதம் அப்பாற்பட்டு செய்த பல மக்கள் நல பணிகளின் அனுபவத்திற்கு பிறகு நன்கு தெளிவு பெற்ற பிறகு துவங்கப்பட்ட கட்சியான அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவான மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட கட்சி மனிதநேய மக்கள் கட்சி கடந்து வந்த பாதை தற்போது மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் மக்களின் நலனுக்காக பேசி வருவது குறித்தும், இது வருங்காலத்தில் குறைந்தது 20 சட்டமன்ற உறுப்பினர்களாக உயர வேண்டும் அதற்கு உங்களின் ஒத்துழைப்பு தேவை ஒரு கை ஓசை வராது இரண்டு கைகள் தட்டினால் தான் ஓசை எழும்பும் அதுபோல் பறந்து விரிந்து கிடக்கும் நமது சமுதாயம் ஒற்றுமையுடன் உரக்கச் சொல்ல வேண்டும் ஓங்கிச் சொல்ல வேண்டும் அப்போதுதான் நமக்கு உரிய அங்கீகாரத்தை போராடி பெற முடியும். நம் பள்ளிவாசல்கள் பாதுகாக்க முடியும். இளைய சமுதாயம் எங்களை போல் இதே மேடையில் முன்னாள் அமர்ந்து நாங்கள் செய்த பணியை விட பன்மடங்கு செய்து மக்கள் நலன் காக்க வேண்டும். தப்பி தவறி போதை என்ற பாதையில் சென்று உங்கள் வாழ்க்கையை தொலைத்து விட கூடாது. தற்போது சத்தமின்றி வக்பு திருத்த மசோதா இரண்டு அவைகளிலும் நிறைவேற்றி கொண்டுவர ஒன்றிய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. இதை தடுக்க நாம் ஒன்று சேர்ந்து அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதை உங்களுக்கு தெரிவிப்பதற்காகவே இந்த அறைக்கூவல் விடுகிறோம் இனியாவது சுதாரித்து நாம் பல அமைப்புகளாக இருந்தாலும் அனைவரும் ஒன்று சேர வேண்டும். நம் உரிமையை பாதுகாக்க ஒன்றுபடுவோம் போராடுவோம்…
என்று வீரமழக்கமிட்டனர். அனைத்து சமுதாய மக்களுக்கான இந்த ஆம்புலன்ஸை தொழிலதிபர் டத்தோகோபத்தோ முகம்மது இப்ராஹிம் அவர்கள் வழங்கினார்கள் அதை மக்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பா அப்துல் சமுத் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினருக்கு நவாஸ் கனி அவர்களும் அர்ப்பணிப்பு செய்தார்கள்
கூட்டத்தில் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்ட ஏற்பாடுகளை பனைக்குளம் கிளை மூத்த உறுப்பினர் செய்யது அகமது, பனைக்குளம் கிளைத்தலைவர் அஸ்ரார், துணைத் தலைவர் லுத்புல்லாஹ், செயலாளர் ஆசிக், கிளை பொருளாளர் முகவை கமால், சுஹைல் அஹமது சஹாதத்துல்லாஹ் ஹபிப்ரஹ்மான் அமிர் சாலிஹ் சுகைல் மகாதீர் முஹம்மது பாரூக் அப்சான் அப்துல்லா பைகான் அனீஸ் ஹம்தன் அன்வர் ஹசன் ஹசிப்அஹமது ஹாமிதுல்லாஹ் மற்றும் பனைக்குளம் கிளை நிர்வாகிகள் தொண்டர்கள்ப் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்த மாபெரும் கூட்டத்தில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
பனைக்குளம் மமக கிளைச் செயலாளர் பாசித் நன்றி கூறினார்.