தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மீண்டும் மஞ்சப் பைகளை பயன்படுத்துவது மற்றும் பிளாஸ்டிக் இல்லாத தருமபுரி குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் கொடியசைத்து துவக்கி வைத்தும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், மஞ்சப்பைகளை வழங்கினார். இப்பேரணியில் விஜய் வித்யாலயா நர்சிங் கல்லூரி மற்றும் கிருஷ்ண பாராமெடிக்கல் கல்லூரியை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்பேரணி நகர பேருந்து நிலையத்தில் தொடங்கி நான்கு ரோடு சந்திப்பு வரை சென்றடைந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் இல்லாத தருமபுரி குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஆட்சியர் தலைமையில் ஏற்கப்பட்டது.பின்னர் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் ரூ.1.85 மதிப்பீட்டில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை பயன்பாட்டிற்கு ஆட்சியர் திறந்து வைத்தார். இந்த இயந்திரத்தில் ரூ. 10 செலுத்துவதன் மூலம் ஒரு துணிப் பையை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் கிராமிய கலைக்குழுவினரால் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சியை ஆட்சியர் பார்வையிட்டார். இதில் தருமபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான்மாது, தருமபுரி நகராட்சி ஆணையர் சேகர், மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் உதயகுமார், நகர் நல அலுவலர்லடஷியவரணா மற்றும் அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics