சந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது, விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட திமுக விவசாயி துணை அமைப்பாளர் காமராஜ் கலந்துகொண்டு பள்ளியில் படிக்கும் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார். விழாவில் ஊராட்சி செயலாளர் கஜேந்திரன், தெய்வம், மாது பெரியசாமி, கமலநாதன், உதயகுமார், மற்றும் பெற்றோர்கள் கிராம மக்கள் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்தாக தலைமை ஆசிரியர் பெருமாள் வரவேற்றார். அதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம். வளையம் பட்டி பிரபாகரன் தனது சொந்த செலவில் ரூ. 35 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளி மாணவர்கள் நலன் கருதி குடிநீர் தொட்டி அமைத்து கொடுத்தார்.