ஈரோடு ஆக 6
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 20 ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்
இதை தொடர்ந்து அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன் என்பது குறித்து அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்து உள்ளார்
இது தொடர்பான ஆய்வு கூட்டம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
அப்போது அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தி திட்டப்பணிகளின் நிலை குறித்து தொடர்ந்து, கேட்டறிந்து வருவதுடன், விரைவாக இத்திட்டத்தினை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தி வருகிறார். இத்திட்டத்தில் மொத்தம் உள்ள 6 நீரேற்று நிலையங்களில் 1 முதல் 3 நீரேற்று நிலையங்கள் உள்ள பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் சிறு தொய்வு ஏற்பட்டதன் காரணமாக பணிகள் சிறு காலதாமதமானது. நீரேற்று நிலையம் 1 முதல் 3 இடையில் உள்ள பட்டா நிலங்களின் வழியாக பிரதான குழாய் பதிக்கும் பணிகளை தொடங்கும் முன் நில இழப்பீடு மற்றும் பயிர் இழப்பீடு தொகை வழங்கிய பின் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதால் கடந்த ஜூன் 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரை அப்பகுதியில் குழாய் பதிக்கும் பணிகளை தொடங்க இயலவில்லை. ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள் மூலம் பல்வேறு பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டும் நில உரிமையாளர்கள் முன் வரவில்லை. தொடர்ந்து நில உரிமையாளர்களிடம் அரசின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு செப்டம்பர் 2022 முதல் குழாய் பதிக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு ஜனவரி 2023-ல் பணிகள் முடிக்கப்பட்டது. அதன் பின்னர் 20.02.2023 அன்று சோதனை ஓட்ட பணிகள் தொடங்கப்பட்டது. இருப்பினும் பயன்பாடு இல்லாத காரணத்தல் பல்வேறு இணைப்பு
இயலவில்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் வருகிற 15 அன்று உறுதியாக
பவானிசாகரில் தண்ணீர் திறந்து விட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி,
தண்ணீர் திறந்து விட்ட பிறகு கிடைக்கும் அதிகப்படியான உபரிநீர் பெற்றவுடன் 6 நீரேற்று
நிலையங்களிலும் ஒரே நேரத்தில் இயக்கும் வாய்ப்புகள் அமைந்தவுடன் உடனடியாக
இத்திட்டப்பணியினை விரைவாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் தொடர்புடைய துறை
அலுவலர்கள் இத்திட்டத்தில் தனி கவனம் செலுத்தி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்
தொடர்ந்து, பிற துறைகள் மூலம் கிளைக் குழாய்களில் ஏற்பட்ட பழுதுகளை சரிசெய்து ஜூன் 2023-ல் 750 குளம் குட்டைகளுக்கு தண்ணீர் கொண்டு சேர்க்கப்பட்டது. அதன் பின்னர் போதிய உபரி நீர் காலிங்கராயன் அணைக்கட்டில் இல்லாத காரணத்தினால் மீண்டும் நவம்பர் 2023-ல் தொடங்கப்பட்டு ஜனவரி 2024-ல் 1045 குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. மார்ச் 2024 முதல் உபரிநீர் காலிங்கராயன் அணைக்கட்டில் இல்லாத
காரணத்தினால் இத்திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இயலவில்லை. மேலும், 30.07.2024 முதல் காலிங்கராயன் அணைக்கட்டில் உபரிநீர் வரத்தொடங்கி, காவேரி ஆற்றில் வெள்ள நீர் வரத்தொடங்கியதால், இத்திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்னேற்பாடாக சோதனை ஓட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது, மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று உறுதியாக பவானிசாகரில் தண்ணீர் திறந்து விட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி, தண்ணீர் திறந்து விட்ட பிறகு கிடைக்கும் அதிகப்படியான உபரிநீர் பெற்றவுடன் 6 நீரேற்று நிலையங்களிலும் ஒரே நேரத்தில் இயக்கும் வாய்ப்புகள் அமைந்தவுடன் உடனடியாக இத்திட்டப்பணியினை விரைவாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் இத்திட்டத்தில் தனி கவனம் செலுத்தி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இத்திட்டத்தில் சிறு, சிறு பழுதுகள் ஏதேனும் இருப்பின் அந்த பழுதுகளையும் விரைந்து
முடிக்க தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
எனவே உண்ணாவிரத போராட்டத்தை பாரதீய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கைவிட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறனார்
தொடர்ந்து அமைச்சர் அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட
விவசாயிகளுடன், இத்திட்டம் தொடர்பான கலந்தாலோசனை நடத்தினார்
கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சு.சாந்தகுமார் வருவாய் கோட்டாட்சியர்கள் சதிஷ்குமார் (ஈரோடு), கண்ணப்பன் (கோபிசெட்டிபாளையம்), நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளர் திருமலைகுமார். செயற்பொறியாளர்கள் நரேந்திரன், சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முகம்மது குதுரத்துல்லா (பொது), பிரேமலதா (நிலம்) உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.