நடிகர் ரஜினிகாந்தின் 74 ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது .இதனை முன்னிட்டு ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை நகர ரஜினி நற்பணி மன்றம் சார்பில் பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி பால் , பன்னீர் , சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக , ஆராதனைகள் சுவாமிக்கு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் ஒன்றிணைந்து ரஜினி பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டனர். பின்னர் மாவட்ட தலைவர் ராஜேஸ்வரன் தலைமையில் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நகர செயலாளர் பவுன் முருகானந்தம், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமகிருஷ்ணன், நகர இளைஞரணி செயலாளர் பிரபு, சீர்காழி ஒன்றிய செயலாளர் தியாகராஜன், நகர துணை செயலாளர் ரஜினி ஜெரால்டு, நகர செயற்குழு உறுப்பினர் சிவா, மதன், மணிகண்டன், பாலா, மற்றும் போட்டோ அன்பு, உள்ளிட்ட ரஜினி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics