சென்னை, அக்டோபர்-23, அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் 3ஆம் ஆண்டு விழா, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் விழா, ப்ராஜெக்ட் 50 நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா அனைத்து மக்கள் இயக்கத்தின் தலைவர் கலைமகன் (எ)டாக்டர் எஸ் .வெங்கடேசன் ஏற்பாட்டில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹெச். வி . ஹண்டே மற்றும் மனிதநேய அறக்கட்டளை நிறுவனத் தலைவரும் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர் .
மேலும் இந்நிகழ்ச்சியில் தேசிய முன்னேற்ற கழகம் நிறுவன தலைவர் ஜி. ஜி. சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக அறக்கட்டளை நிர்வாக குறிப்புகள் அடங்கிய ப்ராஜெக்ட் 50 என்ற நூல் வெளியிடப்பட்டது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.
அனைத்து மக்கள் சக்தி இயக்கம் சார்பாக சமூக ஆர்வலர், சுற்று ச்சூழல்,சமூக நீதி ஆர்வலர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விதைப்பந்து விழிப்புணர்வு இசை ஆல்பம் வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விதைப்பந்துகள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டது .