கிருஷ்ணகிரி செப் 28:
விடுதலை சிறுத்தை கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ம் தேதி அன்று உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கிருஷ்ணகிரி மைய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் சார்பில் கிருஷ்ணகிரி நகரின் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக சென்று மாநாடு விளக்க துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது. மைய மாவட்ட செயலாளர் அ.மாதேஷ் தலைமையில், மேலிட பொறுப்பாளர் தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன், சேலம் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கிருஷ்ணகிரி நகர் முழுவதும் பேரணியாக சென்று மது போதை ஒழிப்பு மாநாடு குறித்த விளக்கத் துண்டு பிரசுரம் வழங்கினார்கள். கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலையில் இருந்து துவங்கிய பேரணி, உழவர் சந்தை வழியாக கிருஷ்ணகிரி ரவுண்டானா வந்தடைந்து, பின்னர் பெங்களூர் ரோடு வழியாக கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரில் நிறைவு பெற்றது. சுமார் 100மகளிர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று கடைகள் மற்றும் பேருந்து, ஆட்டோ வாகனங்களில் செல்லும் பொதுமக்களுக்கு மது போதை ஒழிப்பு மாநாடு குறித்த விளக்க துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் நகர் முழுவதும் துண்டறிக்கை விநியோகம் செய்யும் பேரணியில், ஒன்றிய செயலாளர் ஆலப்பட்டி ரமேஷ், சூளகிரி ஒன்றிய செயலாளர் முனியப்பன், தொகுதி துணை செயலாளர் முரளி, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் ஜெய்சங்கர், சிவக்குமார், மகளிர் அணி மாவட்ட செயலாளர் முருகம்மா, மாவட்ட துணை செயலாளர் லதா, மகளிர் அணி மாவட்ட பொருளாளர் நந்தினி, மகளிர் ஒன்றிய செயலாளர்கள் காயத்ரி, செல்வி, முருகம்மா, நகரச் செயலாளர் கணபதி, மற்றும் கோபி, சேட்டு, சிலம்பரசன், பவுன்ராஜ், பலராமன், ராஜா, உள்ளிட்ட திரளான பெண்கள் மாவட்ட மகளிர் அணியினர் மற்றும் ஒன்றிய நகர மாவட்ட நிர்வாகிகள் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விசிக கட்சி சார்பில் மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு மாநாடு

Leave a comment