பரமக்குடி.ஏப்.2: பரமக்குடியில் அம்மா பேரவை சார்பாக கோடைகால நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
பரமக்குடி பேருந்து நிலையம் எதிரில் அதிமுக நகர் அம்மா பேரவை சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நகர் செயலாளர் வட மலையான் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவிற்கு மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கழக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவம் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து பொதுமக்களுக்கு மோர் மற்றும் பழங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பின ர்கள் டாக்டர் முத்தையா, ராஜ வர்மன், நகர் கழக செயலாளர் ஜமால்,பரமக்குடி நகர் நிர்வாகி திருமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
படம்
பரமக்குடியில் அதிமுக நகர் அம்மா பேரவை சார்பாக மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் இலவச நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.