தஞ்சாவூர்.மே 5.
பள்ளி மாணவர்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மோட்டார் வாகனங் களை ஓட்டுவது அதிகரித்து வருகிறது கவலை அளிக்கிறது.
இதனால் மாணவர்களின் பாதுகாப்பின்மை மற்றும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது எனவே பள்ளி மாணவர்கள் வாகன ங்களை ஓட்டாமல் இருக்க வேண்டு ம், என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்கள் பலரும் தங்கள் பெற்றோர் அல்லது உறவினர்களின் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர்.
போக்குவரத்து விதிகளை மதிக் காமல் மாணவர்கள் வாகனங் களை ஓட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் வாகனங்களை ஓட்டா மல் இருக்க வேண்டும், என்பது உறுதி செய்ய வேண்டும். பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பாது காப்பை உறுதி செய்ய தேவை யான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பள்ளி மற்றும் பொது இடங் களில் விழிப்புணர்வு போஸ்டர்கள் மற்றும் அறிவிப்பு பதாகைகள் ஒட்ட வேண்டும். மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளை களிடம் வாகனங்களை ஓட்டுவ தற்கு கொடுக்கக் கூடாது. இதை மீறும்பள்ளி மாணவர்களின் பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
பொதுமக்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் வாகனங்களை ஓட்டாமல் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது



