மதுரை மே 30,
தென்தமிழ்நாட்டில் பெயர் பெற்ற மதுரை அப்போலோ மருத்துவமனை 50 க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து சாதனை
மதுரை அப்போலோ மருத்துவமனை தனது பயணத்தில் தொடர்ச்சியாகப் பல வெற்றிப்படிகளைக் கடந்து வருகிறது. அதில் மற்றொரு சிறப்பம்சமாக தற்போது 50க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து சாதனைப் படைத்துள்ளது. இதன் மூலம் மருத்துவத்துறையில் தனது நிபுணத்துவத்தையும் நிலைநாட்டியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு முதல் அப்போலோ மருத்துவமனை வெற்றிகரமாக 50க்கும் மேற்பட்டோருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து அவர்களுக்குப் புத்துயிர் அளித்துள்ளது. தென்தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சையைக் கொண்டு சேர்ப்பதில் அப்போலோ மருத்துவமனை என்றும் முன்னிலை வகிப்பதையும் இந்தச் சாதனை எடுத்துக்காட்டுகிறது.
இந்தச்சாதனை மைல்கல்லை எட்டியதில் கல்லீரல் மாற்று சிகிச்சை செயல் திட்டத்தின் வழிகாட்டியாகவும் தலைவராகவும் செயல்பட்ட டாக்டர் இளங்குமரனின் நிபுணத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது.
அப்போலோ மருத்துவமனையின் மதுரை மண்டல தலைமைச் செயல் இயக்குனர் நீலகண்ணன், “இந்தச் சாதனை எங்களுக்குப் பெருமிதம் தருகிறது. மதுரையில் மருத்துவ சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதிலும், எங்களை நாடி வரும் மக்களுக்குச் சிறப்பான சிகிச்சைகளை வழங்குவதிலும் எங்கள் சேவையை நங்கள் அர்ப்பணித்து வருகிறோம்” என்றார்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் இரண்டு வகைகள் உண்டு ஒன்று காடவர் டோனார் எனப்படும் இறந்தவரிடம் இருந்து கல்லீரல் தானம் பெறப்பட்டு செய்யப்படும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றொன்று வாழும் கொடையாளியிடம் தானம் பெற்று செய்யப்படும் அறுவை சிகிச்சை, பொதுவாக கல்லீரலில் இரண்டு பாகங்கள் உண்டு அதில் ஒரு பாகத்தைத் தானமாக எடுத்தாலும் அது மீண்டும் உயிர்ப்பித்து வளரக்கூடிய தன்மையுடையது என்பது
குறிப்பிடத்தக்கது. மதுரை அப்போலோ மருத்துவமனையில் உள்ள அதிநவீன வசதிகளுடன், அர்ப்பணிப்புடன் செயல்படக்கூடிய தலைசிறந்த மருத்துவ நிபுணர்களும் இணைந்து சிகிச்சைப் பெறுபவர்களுக்கு உயர்தரமான சேவைகளையும் சிகிச்சைகளையும் அளித்து வருகிறார்கள். 50க்கும் மேற்பட்ட கல்லீரல் அறுவை சிகிச்சைகள் என்பது எண்ணிக்கை சார்ந்த சாதனை என்பதைக் காட்டிலும் அது எங்களின் அதிநவீன வழிமுறைகள் மற்றும் கனிவான சேவையின் வாயிலாகத் தென் தமிழக மக்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதில் உள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது மருத்துவ சேவையின் தரத்திற்கான எல்லையை விரிவுபடுத்துவதிலும் வருங்காலத்தில் தொடர்ச்சியாகப் பல மைல்கல்களை எட்டுவதிலும் அப்போலோ உறுதியுடன் இருக்கிறது. எனக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மதுசூதனன் கூறினார். இதுதொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அப்போலோ மருத்துவமனையின் மதுரை மண்டல தலைமைச் செயல் இயக்குனர் நீலகண்ணன் மருத்துவ சேவைகள் இணை இயக்குனர் பிரவீன் ராஜன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் இளங்குமரன், மதுசூதனன், மஞ்சுநாத், குலசேகரன், கல்லீரல் நிபுணர் குமரகுருபரன் ஆகியோருடன் குடலியல் சிகிச்சை நிபுணர்கள் ராஜேஷ், பிரபு, பிரவீன் குமார், தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் ஐயப்பன் மார்க்கெட்டிங் பொது மேலாளர் மணிகண்டன் ஆகியோரும் உடனிருந்தனர்.