நாகர்கோவில் அக் 29
ஈத்தாமொழி – ஈயன்விளை, கல்லவீரியன்விளை அருள்மிகு அரசடி சிவசுடலைமாட சுவாமி திருக்கோவில் கொடைவிழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.
கல்லவீரியன்விளை அருள்மிகு அரசடி சிவசுடலைமாட சுவாமி திருக்கோவில் கொடைவிழா 3 நாட்கள் நடைபெற்றது. 2-ம் நாள் கொடைவிழாவில் நாதஸ்வரம், வில்லிசை, கால சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, சுடலைமாட சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இக்கொடைவிழாவில் தளவாய்சுந்தரம் எம் எல் ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் தாமரை தினேஷ், இராஜாக்கமங்கலம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் என்.எம்.செல்வகுமார், மாவட்ட பிரதிநிதி தங்கராஜ், கிளை செயலாளர்கள் நடராஜன், ரவிசந்திரன், கோவிந்தன், திருக்கோவில் நிர்வாகி மோகன் மற்றும் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.