மதுரை டிசம்பர் 12,
மதுரை, தாய்லாந்து நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி செல்வி.அமுல்யாஈஸ்வரி 1500 மீட்டர், 800 மீட்டர் ஒட்ட போட்டியில் 2 தங்கப்பதக்கமும் மற்றும் 400 மீட்டர் ஓட்ட போட்டியில் வெண்கல பதக்கமும் மற்றும் கல்லூரி மாணவன் செல்வன். வருண் குண்டு எறிதலில் வெள்ளிப்பதக்கமும், வட்டு எறிதலில் வெண்கலப்பதக்கமும் வெற்றி பெற்று சாதனை செய்துள்ளனர் அதனை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உதவி ஆட்சியர்(பயிற்சி) வைஷ்ணவி பால், மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் இளைஞர் நல அலுவலர் முனைவர்.இராஜா ஆகியோர் உடன் உள்ளனர்.