ஆரல்வாய்மொழி, நவ. 04
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி ரயில்நிலையத்தில் தண்டவாளத்தில் கிடந்த ஆமை வனத்துறையினர் மீட்டு பொய்கை அணையில் விட்டனர்.
ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரம் பகுதியை சார்ந்த கிட்டு(எ) கிருஷ்ணன் இவருக்கு சொந்தமான தோட்டம் ஆரல்வாய் மொழி ரயில்நிலையம் அருகே உள்ளது. இந்நிலையில் தனது தோட்டத்துக்கு செல்வதற்காக ரயில்நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார் அப்போது ரயில் தண்டவாளம் அருகே ஒரு ஆமை மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தது அந்த நேரம் ரயில் வருகின்ற நேரம் என்பதால் ஆமையானது ரயிலில் அடிபட்டு விடக்கூடாது என்பதற்காக அதனை காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்பில் துரிதமாக செயல்பட்டு அந்த ஆமையினை பத்திரமாக தண்டவாளத்தில் இருந்து எடுத்து ரயில்நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். ரயில்நிலைய அதிகாரிகள் உடனே வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அமையினை கைபற்றி பத்திரமாக பொய்கை அணையில் விட்டனர்.