கம்பம்.
தேனி மாவட்டம் கம்பம் உழவர் சந்தை அருகில் உள்ள அரசு கள்ளர் துவக்க பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சமூக ஆர்வலர் ரமேஷ் பள்ளி மாணாக்கர்களுக்கு மரக்கன்று கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.போதைப் பொருள்களால் ஏற்படும் விளைவுகள் அதிலிருந்து தற்காத்துக் கொள்வதை பற்றி மானாக்கர்களுக்கு எடுத்துரைத்தனர்.இதில் இருபால் ஆசிரிய பெருமக்கள் மாணாக்கர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.