சுசீந்திரம் நவ 28
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் செல்லும் பாதையில் உள்ள நுழைவு வாயில் அருகே சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலான தபால் நிலையம் ஒன்று உள்ளது இந்த தபால் நிலையம் சுசீந்திரம் கற்காடு தேருர் தேவகுளம் உட்பட்ட கிராமங்களில் உள்ள தபால் நிலையங்களின் தலைமை தபால் நிலையமாக செயல்பட்டு வருகின்றது. தற்சமயம் இந்த தபால் நிலையம் மழைக்காலங்களில் மழை நீர் ஒழுகி பொதுமக்கள் நனைந்து செல்லும் நிலை உள்ளது. இது குறித்து சுசீந்திரம் பேரூராட்சி 11 வது வார்டு கவுன்சிலர் காசி என்பவர் கூறும் போது:- இந்த தபால் நிலையம் மன்னர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது இந்த தபால் நிலையத்தில் பொதுமக்கள் சேமிப்பு கணக்குகள் வைத்துள்ளனர் மேலும் கிராமப்புற தபால் நிலையங்களின் தலைமை தபால் நிலையம் ஆகவும் இருப்பதால் அதிக பொது மக்கள் இந்த தபால் நிலையம் வந்து சேமிப்பு கணக்குகளுக்கு பணம் செலுத்தி செல்கின்றனர். பழமையான கட்டிடம் என்பதால் ஓட்டு பணி செதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது இதனால் தபால் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் பயத்துடனே வந்து செல்லும் சூழ்நிலை உள்ளது மேலும் தபால் நிலையம் அருகே தபால் நிலைய ஊழியர்கள் தங்குவதற்கு ஒரு கட்டிடமும் இருந்தது அந்த கட்டிடமும் இடிந்து விழுந்ததோடு வேறு புதிய கட்டிடம் அந்தப் பகுதியில் கட்டாமல் அந்த இடம் பயனற்று கிடக்கின்றது. இந்த கட்டிடமானது கன்னியாகுமாரி செல்லும் மெயின் சாலை அருகே உள்ளதால் செதில் செதிலமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ள பழமையான தபால் நிலைய கட்டிடத்தை இடித்துவிட்டு பொதுமக்கள் பயன்படும் வகையில் இந்த தபால் நிலையத்தை புதிதாக கட்டி தேவையற்று கிடக்கும் நிலத்தையும் மக்களுக்கு பயன் படும் விதத்தில் அமைக்க வேண்டும் என கூறினார் .மேலும் கட்டிடத்தை பார்க்கும் போது கட்டிடத்தின் அருகே பட்டுபோய் கீழே விழும் நிலையில் மாமரம் ஒன்று நிற்கின்றது இந்த தபால் நிலையம் எதிரி பயணிகள் பேருந்து நிறுத்தமும் உள்ளது. அதுபோல சுசீந்திரம் மேல்நிலைப் பள்ளியும் இதன் அருகிலே உள்ளதால் பஸ் ஏறுவதற்காக பள்ளி மாணவ மாணவிகள் மக்கள் கட்டிடம் எதிரே தான் நிற்க்க வேண்டி உள்ளது மழைக்காலம் என்பதால் பட்டு நிற்க்கும் மரம் கீழே விழுந்தால் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.மெயின் ரோடு அருகே மரம் இருப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் பேருந்துகள் மீதும் விழுந்து பெரும் ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே பெரும் விபத்து ஏற்படும் முன்பு உடனடியாக பட்டு விழும் நிலையில் உள்ள மாமரத்தை உடனடியாக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும், இடிந்து விழும் தருவாயில் உள்ள தபால் நிலையத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு தபால் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.