கோவை, ஆகஸ்ட் 30 –
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோவில் திடலில் தலைமை விநாயகர் நண்பர்கள் குழு விநாயகர் சிலை வைக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் நாளைய தலைமுறை ஜமாப் கலைக்குழு சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பெரியவர்கள் முதல் சிறியவர்களை ஜமாப் கலைக்குழு சார்பாக நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை விநாயகர் நண்பர்கள் குழு நிர்வாகிகள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



