நாகர்கோவில், ஆக. 15 –
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 79-வது சுதந்திர தின விழா இன்று காலை சிறப்புறக் கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் சுசீலாபாய் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். விழாவின் தொடக்கமாக உடற்கல்வி இயக்குநர் முனைவர் ஷாகுல் ஹமீது அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் சுசீலாபாய் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.
மாணவிகள் கொடி வணக்கப் பாடினர். தொடர்ந்து அனைவரும் தேசிய உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புள்ளியியல் துறை ஆசிரியர் முனைவர் ஜெராமியா முத்துராஜ் நன்றியுரை ஆற்றினார். புள்ளியியல் துறை மாணவி ஜோஸ்பின் ரெமிஷா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாகத் தேசிய கீதம் பாடப்பட்டு விழா நிறைவுற்றது.



