குளச்சல் மே 31
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மழையுடன் பலத்த காற்றும் வீசி வருவதால் பல இடங் களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்தநிலையில் குளச்சல் பகுதியில் நேற்று மாலையில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் குளச்சல் போலீஸ் நிலைய வளாகத்தில் நின்ற பழமையான வேப்பமரம் இரண்டாக பிளந்து முறிந்து விழுந்தது. அத்துடன் அருகே நின்ற சவுக்கு மரம் வேரோடு சாய்ந்தது. சவுக்கு உள்ள மரம் சாய்ந்து அருகில் தென்னை மரத்தில் விழுந்து மரத்தின் கொண்டை முறிந்து விழுந்தது
இந்த சம்பவத்தில் வேப்ப மரம், சவுக்கு மரம் சாய்ந்து அருகில் உள்ள மகளிர் போலீஸ் நிலைய கட்டிடத் தின் மீது விழுந்தது.
இதில் போலீஸ் நிலைய கட்டிடத்தின் மேல் மாடியின் சுவர் மற்றும் முன்பக்க தாழ் வாரம் பகுதிகள் உடைந்து சேதமடைந்தது,
குளச்சல் காவல் நிலையம், குளச்சல் கடல் காவல் நிலையம் , குளச்சல் மகளிர் காவல் நிலையம், குளச்சல் போக்குவரத்து காவல் நிலையம், குளச்சல் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எல்லாம் இந்த வாளகத்திற்குள்ளேயே அமைந்திருக்கிறன.
பொதுவாக மாலை நேரத்தில் பொதுமக்கள் பலர் புகார் கொடுக்க போலீஸ் நிலைய கட்டிடத்தின் வெளியே காத்து நிற்பார்கள். நேற்று மழை காரணமாக பொது மக்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை…
இதுகுறித்து தகவலறிந்த குளச்சல், திங்கள்சந்தை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரம் போராடி மரங்களை வெட்டி அகற்றினர். மரங்கள் முறிந்து விழுந்ததில் குளச்சல் பகுதியில் பல மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. இதனை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்தனர் ..



