கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி,கயத்தார் யூனியன் உள்பட்ட கழுகுமலை அருகிலுள்ள வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில், நடைபெற்ற கோவில் கொடை விழாவில் ஊர் பொதுமக்களின் அழைப்பினை ஏற்று திமுக சார்பில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் கலந்து கொண்டார், இவருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் மாலை அணிவித்து மேளதாளத்துவுடன் சிறப்பாக வரவேற்பு வழங்கப்பட்டது, இவ்விழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், கலை இலக்கிய போட்டிகள், வினாடி வினாக்கள், என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன, இந்த போட்டியில் வெற்றி பெற்றவர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் சார்பில் பரிசு பொருட்களை வழங்கப்பட்டது மேலும் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற வெங்கடேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் k.வெங்கடேஸ்வராபுரம் பஞ்சாயத்து தலைவர் தினேஷ்குமார் தலைமை வகித்தார், துணைத் தலைவர் சௌந்தரராஜன் மற்றும் ஐயப்பராஜ் முன்னிலை வகித்தனர், ஊராட்சி செயலர் சரமாரியப்பன், ராஜா புதுக்குடி சேர்ந்த பால்ராஜ், திருமங்கலம் குறிச்சி . செல்லத்துரை, . பரமசிவம், தெற்கு இலந்த குளம் நாட்டாமை ஆறுமுகம், சதீஷ்குமார், மற்றும் ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொது மக்களுடன் சேர்ந்து திமுக கிளை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்கள்…
கழுகுமலை அருகிலுள்ள வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில், நடைபெற்ற கோவில் கொடை விழா

Leave a comment