தாமரைக் குளம் பதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது 11 நாட்கள் நடக்கிறது தென்தாமரைகுளம்., ஏ. 19.தென் தாமரைகுளம், அய்யா வைகுண்ட சுவாமியின் ஐம்பதிகளில் அகிலத்திரட்டு அம்மானை அருளிய மூலப்பதியான தாமரைகுளம் பதியில் சித்திரைத்திருவிழா நேற்று 18-ம்தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கி 28-ம் தேதி வரை 11-நாட்கள் நடைபெறுகிறது.
முதல் நாள் திருவிழாவான நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை
,5 மணிக்கு உகப்பாட்டு,காலை 6 மணிக்கு திருக்கொடியேற்றுதல்
8 மணிக்கு காலை சிற்றுண்டி வழங்குதலும்,11.30 மணி
க்கு அய்யாவுக்கு பணிவிடை, நண்பகல் 12. மணிக்கு உச்சிப்படிப்பு,12.15 மணிக்கு அன்னப்பால் தர்மம்,மாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை,
இரவு 7மணிக்கு அய்யா சிம்மாசன வாகனத்தில் பவனி வருதல்,8 மணி
க்கு அன்ன தர்மம் வழங்குதலும் நடைபெற்றது.
இரண்டாம் நாள் திருவிழாவான இன்று முதல் 10ஆம் நாள் திருவிழாவான 27-ம் தேதி வரை காலை மாலை இரவு அய்யாவுக்கு பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பு இரவு வாகனப்பவனியும், அன்னதர்மமும் நடைபெறுகிறது.8-ம் திருவிழாவான 25-ம்தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை,
காலை 6 மணிக்கு உகப்பாட்டு,
11.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை,நண்பகல் 12 மணி க்கு உச்சிப்படிப்பு,மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை,6 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் வீதி வலம் வருதல்
,இரவு 7.45 மணிக்கு கலிவேட்டை,
8 மணிக்கு அன்ன தர்மம் வழங்குதலும் நட்கிறது.
11-ம் திருவிழாவான 28 ம்தேதி திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை
,காலை 6 மணிக்கு உகப்பாட்டு
,9.30 மணிக்கு திருத் தேரோட்டம்,
பகல் 12.30 மணிக்கு சமபந்தி விருந்து,மாலை 6 மணிக்கு
,அய்யாவுக்கு பணிவிடை,6.30 மணிக்கு அய்யா ரிஷப வாகனத்தில் பதிவலம் வருதல்
,இரவு 7.15 மணிக்கு திருக்கொடி அமர்த்துதல்,8 மணிக்கு
அன்ன தர்மம் வழங்குதலும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை தக்கார், குருபரம்பரையினர், மற்றும் அய்யாவின் கொடிமக்கள் செய்துவருகின்றனர்.



