பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில், அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து மாற்றி முதலமைச்சருக்கு அதிகாரம் வழங்கும் மசோதா உள்ளிட்ட பத்து மசோதாக்கள் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமாக இயற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த தீர்மானங்களை ஆளுநர் நிராகரித்து குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டப்படி தவறு என்று தெரிவித்து பத்து மசோதாக்களுக்கும் அனுமதி வழங்கியது. இதனை கொண்டாடும் வகையில் மயிலாடுதுறையில் திமுகவினர் பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் குண்டாமணி என்கிற செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் ஏராளமான திமுகவினர் பங்கேற்று வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்



