பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம் பணிக்கம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் தலைமை ஆசிரியர் மலர்விழி தலைமை வகித்தார். இந்நிகழ்வில் மாணவர்கள் நாட்டுப்புறப்பாடலுக்கு நடனம் ஆடினயும், சுற்றுச்சூழல் பாதுகாத்தல் மற்றும் பூமி வெப்பமாதல் குறித்து உரை நிகழ்த்தினார்கள். மேலும் இந்நிகழ்வில் வகுப்பு ஆசிரியர் சுமதி பள்ளிக்கல்வி மேலாண்மை குழு தலைவர் ஸ்ரீதேவி அன்பரசன், துணைத் தலைவர் அங்காத்தாள், மற்றும் பள்ளி மேலாண்மை கல்வி உறுப்பினர்கள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



