அருமனை, மார்- 8
அருமனை அருகே மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் பைஜூ (45). கூலி தொழிலாளி. இவர் இன்று 7-ம் தேதி காலை வழக்கம் போல் தனது பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் கனகராஜ் (55) என்பவர் திடீரென வழிமறித்து, அரிவாளால் பைஜுவை சரமாரியாக வெட்டினார். இதில் பைஜூக்கு உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, உடனடியாக அவரை மீட்டு அருமனை அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிரசித்து அழைப்பு வருகின்றனர்.
இது குறித்து அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கனகராஜ் மதுவுக்கு அடிமையானவர் என்பதும், கடந்த சில தினங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டில் வசிக்கும் மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர் ஒருவரை தாக்கியதாகவும் தெரிகிறது. இது குறித்து மாணவரின் தாயார் அருமனை போலீசில் புகார் அளித்த போது அவருக்கு உதவியாக பைஜுவும் சேர்ந்து காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இதில் கனகராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளார். ஒரு மாதத்திற்கு பிறகு தற்போது வெளியே வந்த கனகராஜ் ஜெயிலுக்கு போக காரணமாக இருந்த பைஜுவை பழிவாங்க திட்டமிட்டு இன்று காலை வெட்டியதாக தெரியவந்துள்ளது. போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.